Saturday, November 28, 2009

சாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - ஒன்றாம் பாகம்



வாரத்துல ஓரு நாள் லீவு கிடைக்குது. பேசாம வீட்ல கிடந்து ரெஸ்ட் எடுக்கிறத விட்டுட்டு. சாமிய பார்க்கப்போறேன். சாஸ்தாவ பாக்க போறேன்று ஏன் அங்கிட்டும் இங்கிட்டும் லாந்திரியன்னு** தெரியலை, சொன்னாலும் கேக்கப் போறதில்லை. போய்ட்டு வாங்க என்று மனைவியின் ஆற்றாமையுடன் சென்னையில் இருந்து திண்டிவனம் பஸ் ஏறினேன்.


சூரியன் உதித்திருந்த காலை நேரம் பயணம் ஆரம்பித்தது, பேருந்து முனனோக்கிச் செல்ல. எண்ணங்கள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

யோகாவில் சிறிது ஆர்வமுண்டு, யோகம் பயில ஆரம்பித்த காலகட்டத்தில் தியானம் செய்ய கற்றுக் கொடுத்தவர் அறிமுகப்படுத்திய நூல், பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய -ஓரு யோகியின் சுயசரிதை- காதலியின் முத்ததிற்கு இணையாக. எத்தனை தடவை படித்தாலும் சலிக்காத .நூல்

அதில் அவர் சந்தித்த சித்தர்களை பற்றி எழுதி இருப்பார், அதை படித்து. அதைப்போன்ற சித்தர்களை காண அலைந்திருக்கிறேன், சிலரை சந்தித்தும இருக்கின்றேன், யோகப்பயிற்சியில் சுணக்கம் ஏற்படும்பொழுத. இவர்களின் சந்திப்பு ஊக்கமாக அமைந்து நமது பயிற்சியை தொடரச் செய்யும், தவிர அவர்களுக்கு கிடைத்த ஞானத்தில். அவர்கள் உணர்ந்த பிரம்மாணடத்தின் ஓரு துளியையாவது நமக்கு காட்டமாட்டார்களா. அதன் மூலமாவது கரை சேர்ந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு.


இந்நிலையில் சாரு லதாவின் இணையத்தளத்தில் சாலையோரச் சாமியையும் உஸ்மான் சித்தரைப் பற்றியும் எழுதி இருந்தார், அவர்கள் இருவரின் விபரங்கள் அறியும் பொருட்டு அவருக்கு மெயில் அனுப்பினேன், அவரின் மொபைல் நம்பர் குடுத்து கால் பண்ணச சொல்லி ரிப்ளை அனுப்பியிருந்தார், இவரைப் பற்றிய எனது அனுமானங்களை பிறகு சொல்கிறேன், அவருக்கு கால் செய்து. சாமி இருக்கின்ற இடத்தின் அடையாளத்தையும். உஸ்மான் சித்தரின் தொலைபேசி எண்ணையும் வாங்கினேன்.

உண்மையான சித்தர்களும் ஞானிகளும் எந்த இடத்திலும் தங்கள் சித்துக்களை வெளிப்படுத்த மாட்டார்கள், காரணம் சித்துக்கள். யோக மார்க்கத்தில் செல்பவர்களை கீழ்நிலைக்கு இழுத்துவிடுவதோடு மட்டுமல்லாது அவர்களின் அஹங்காரத்தையும் தூண்டிவிடும் வலிமை கொண்டது, தவிர எண்ணமற்ற அவர்களது மனதில் சித்துக்கு இடமேது.

உஸ்மான் சித்தரின் போன் நம்பரை வாங்கிவிட்டேனே தவிர. சாலையோர சாமியே மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்ததால். உஸ்மான் சித்தரை தொடர்பு கொள்ளவே இல்லை. என் முன்னோர்கள் செய்த தவப்பலனால் என் அண்டர்வேர் உருவப்படாமல் காப்பாற்றப்பட்டது.


திண்டிவனம் பேருந்து நிலையம். இன்னும் சிறிது நேரத்தில் தகிக்கும் வெயிலில். பைபாஸ் ரோட்டில் சாமியைத் தேடி அலைந்து சோர்வடையப்போகிறேன் என்பதை உணராமல் பேருந்திலிருந்து மலர்ச்சியுடன் இறங்கினேன்.


சாருவின் இணையத்தளம் மூலமும். அவரிடம் பேசியதின் மூலமும் அறிந்து கொண்ட ஓரே அடையாளம். திண்டிவனம் பைபாஸ் ரோட்டில் உள்ள ரெட்டியார் மெஸ். தூரம் அதிகம் என்பதால் ஆட்டோ பிடித்தேன்.

திண்டிவனம் சென்னை சாலையில் பிரிகிறது. திருவண்ணாமலைக்கு செல்லும் பைபாஸ் ரோடு, இந்த சாலை பிரிகிற இடத்தில் இருந்து திண்டிவனம் பேருந்து நிலையம் ஏழு கிலோமீட்டர் இருக்கும் அந்த பைபாஸ் ரோடு. நேராக திண்டிவனத்திற்கு வெளியே செஞ்சி போகும் ரோட்டில் சென்று இணையும். இடையில் ஓரு லெவல் கிராஸிங்ககு வேறு, அந்த ரோடு என்னை சுற்றலில் விட்டது, ரெட்டியார்மெஸ் என் கண்ணில் படவே இல்லை.


சாருவிற்கு கால் பண்ணி கேட்பதற்கு ஓரு சிறு தயக்கம் இருந்தது, சாரு கோணல் பக்கங்கள் மூலம் எனக்கு அறிமுகமானவர், அவரின் எல்லா படைப்புகளையும் படித்தது இல்லை என்றாலும் அவரின் இணையத்தளத்தை தவறாது வாசிப்பேன்.நக்கலும் நையாண்டியுமான அவரது எழுத்து. ஏதாவது ஓரு விதத்தில் படிப்பவரின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வலிமை கொண்டது , அவரது ஆழ்ந்த வாசிப்பானுபவம் ஓவ்வொரு படைப்பிலும் பளிச்சிடும், அவரது எழுத்தின் மூலம். சாரு என்றாலே ஓரு முரட்டு பிம்பம்தான் உருவாகி இருந்தது, தயக்கத்தை உதறி அவருக்கு கால் பண்ணினேன், மிக மென்மையாக பேச்ககூடியவர், ஆட்டோவில்தான் போறீங்க ஆட்டோ டிரைவருக்கு ரெட்டியார் மெஸ்னு சொன்னாலே தெரியுமே என்றார், எதுக்கும் என் கூட வந்தவங்களை கேட்டுட்டு மறுபடியும் கால் பண்றேன் என்று கூறி கட் செய்தார்.

நான் டிரைவரிடம். ஏன் சார் ரெட்டியார் மெஸ்னா எல்லா டிரைவருக்கும் தெரியும்னு சொல்றாங்களே உங்களுக்கு தெரியாதா? அதற்கு ஆட்டோ டிரைவர் முழித்த முழி. திருடனை கூப்பிட்டு ராஜ முழி முழிக் சொன்ன மாதிரி இருந்தது, அவரை சொல்லி குற்றமில்லை. நமக்கு வாய்பது எல்லாம் அப்படித்தான் சென்னை ரோடு வழியாக ஆரம்பித்து. ஏறககுறைய செஞ்சி ரோட்டை அடைந்து விட்டோம்.


மறுபடியும் சாருவே கால் பண்ணினார், தமபி. நான் விசாரிச்சுட்டேன். ரெட்டியார் மெஸ் தான் அடையாளம். அதை கண்டுபிடிச்சிட்டீங்கன்னா,அதிலேருந்து ஓரு அஞ்சு நிமிச நடைதான் என்றவர் மேலும் சில அடையாளங்களையும் கூறி கட் செய்தார், சாருவை பற்றிய முரட்டு பிம்பம் மறையத் தொடங்கி இருந்தது.

கடைசியில். செஞ்சி ரோட்டில் மெஸ் வைத்திருக்கும் ஓருவர் ரெட்டியார் மெஸ்ஸிற்கு செல்லும் சரியான வழியை கூறினார், அது. நாங்கள் மறுபடியும் வந்த இடத்திற்கே செல்ல வேண்டும், அந்த பைபாஸ் ரோட்டில். நாங்கள் திருவண்ணாமலை ரோட்டில் திரும்பிவிட்டோம். மாறாக நேராக சென்னை செல்லும் ரோட்டில் சென்றால் ரெட்டியார் மெஸ் வரும், ஆட்டோ யூடர்ன் அடித்து வேகமெடுத்தது.

மீண்டும் சாருவிடம் இருந்து கால் வந்தது, தம்பி ரெம்ப நேரமா தேடிட்டு இருக்கீங்க. இடத்தை கண்டுபிடித்சவுடன் ஓரு கால் பண்ணி சொல்லுங்க. பார்த்துங்க தம்பி என்று கூறி கட் செய்தார் , பிம்பம் மறைந்துவிட்டிருந்தது.

சூரியன் உச்சி வானத்தை தொட முயற்சித்து கொண்டிருந்தது, ஓரு வழியாக ரெட்டியார் மெஸ் கண்ணுக்கு தெரிய. காத்திருந்த பசி வயிற்றை முழுவதுமாக ஆக்கிரமித்தது,



தொடரும் .......

3 comments:

எறும்பு said...

DISCLAIMAR :- இரண்டு தனிப்பட்ட நபர்களின் உரையாடலை வெளிஇடுவது அவ்வளவு நாகரீகம் இல்லை என்றாலும், இந்த பதிவுக்கு தேவையானதை மட்டும் பயன் படுத்தி இருக்கிறேன்... சாரு மன்னிப்பாராக......

ஸ்வாமி ஓம்கார் said...

nice post :)

எறும்பு said...

சுவாமிஜி தங்கள் வருகைக்கு நன்றி... தன்யனானேன்....