Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts

Wednesday, January 5, 2011

கேபிள் சங்கரின் புதிய புத்தக வெளியீடு --படங்கள்


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய "சுரேகா"

வரவேற்புரை ஓ.ஆர்.பி. ராஜா

சிறப்பு விருந்தனர்கள் திரு.மோகன்பாலு, இயக்குனர் சீனு ராமசாமி, திருமதி.பர்வீன் சுல்தானா.

புத்தக வெளியீடு

கதையை உணர்ச்சிப்பூர்வமாக விமர்சித்து பேசிய திரு.மோகன் பாலு.
இந்த புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை, படித்துவிட்டு சங்கருக்கு கடிதம் எழுதுவேன் என்று பேசிய இயக்குனர் சீனு ராமசாமி.
வாழ்த்திப்பேசிய பேராசிரியை.

புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரை செய்த அண்ணாச்சி ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் அண்ணன் அப்துல்லா, லக்கி லுக் யுவக்ருஷ்ணா.



நன்றியுரை எழுத்தாளர் கேபிள் சங்கர்.

மற்றும் அரங்கை நிறைத்த பதிவர்கள்




Sunday, January 10, 2010

பதிவர் சந்திப்பு - 9-1-2010

நேற்று நல்ல ட்ராபிக் ஜாம். புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில் பைக் நிறுத்த அனுமதி மறுக்க பட்டது. பைக்க எங்க நிறுத்தறதுன்னு சுத்தி முதி பார்த்தா, எதுத்தாப்ல பச்சையப்பா காலேஜ்ல அற்புதமான சிரிப்புடன் நித்யானந்தரின் பேனர். ஆஹா, எல்லார் பிரச்சினைக்கும் தீர்வு சொல்ற சாமி நமக்கும் ஒரு வழி காமிச்சிடார்னு நேர அங்க பைக்க வுட்டேன். நேரம் 5:30 மணி. இன்னும் அரை மணி நேரம் இருக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு சாமி வந்தாச்சான்னு பாக்க போனேன்.

வழுக்கை
உடையவர்கள், இந்த பத்தியை படிக்காமல் தாண்டி செல்லாம். எனக்கு நீண்ட நாட்களாக பொடுகு தொல்லை உண்டு. எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் சரியாக வில்லை. நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தால் அனைத்து பொடுகும் கீழே கொட்டி இருக்கும். ஆனால் நான் எப்பொழுதும் தலை நிமிர்ந்தே இருப்பதால் பொடுகு தொல்லை அதிகமாக இருந்தது. யாரவது என்னுடன் பேசும் போது, நான் அடிக்கடி தலையை சொறிவதால், என்னுடன் பேசுபவர்கள் அவர்களுக்கு தரப்படும் அவமரியாதை என்றே எடுத்து கொண்டார்கள். சரி சாமிய பார்த்தா சர்வ ரோக நிவாரணம் கிடைக்கும் என்பதால் அங்கே சென்றேன். கூட்டம் அதிகமாக இருந்தது. தெரிந்தவர்கள் யாரவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். வந்திந்த அனைவரும் ஞானப்பால் பருக வந்திருப்பதால், கரும்புச்சாரு கடை போடவில்லை என்று சொன்னார்கள். பதிவர் சந்திப்புக்கு நேரம் ஆகிவிட்டதால் தலையை சொரிந்து கொண்டே புத்தக கண்காட்சியை நோக்கி நடையை கட்டினேன்.

நடக்கும்
பொழுதே வீட்டிலிருந்து போன். எங்க இருக்கீங்க? புத்தக கண்காட்சீல இருக்கேன். இன்னிக்கு அஞ்சாவது நாளா போறீங்க, அங்க என்னதான் பண்ணுவீங்க. இல்ல, பதிவர்கள் வருவாங்க அவங்க கூட பேசிட்டு இருப்பேன். வீட்டுக்கு வந்தா டிவி பாக்கிறது இல்ல எதாவது புக்க எடுத்துட்டு உட்கார வேண்டியது.வீட்ல என்னிக்காவது பேசிருகீங்களா, அங்க என்னதான் பேசுவீங்க. எலகியத்த பத்தி பேசுவோம். போன் ஞொய்...

கிழக்கின் அருகில் பதிவர்கள் உதிக்க, அறிமுகதிற்குபின் எலக்கியம் வளர்க்க ஆரம்பித்தோம். சிறு சிறு குழுவாக நின்று பேசிகொண்டிருந்தோம். எங்கள் குழுவில் இருந்த அண்ணன் தண்டோரா, சென்னையில் மானாவாரியாக உச்சரிக்கப்படும், ங் என்றழுத்தில் ஆரம்பித்து தாவில் முடியும் அந்த புனித வார்த்தை தோன்றிய விதம் பற்றி வகுப்பு எடுத்தார். ங்... எலக்கியம் வளர ஆரம்பித்தது. (விபரம் வேண்டுபவர்கள் அண்ணன் தண்டோராவை அணுகவும்)

எலக்கியத்தின் ஊடே நான் ஒரு பதிவரிடம், நமக்கும் கவிதைக்கும் ரெம்ப தூரம், ஒரு கவிதைக்கும் அர்த்தமே புரிய மாட்டேங்குது, குறிப்பா அவரோட ஒரு கவிதையை சொல்லி இதுக்கு என்னானே அர்த்தம் என்று கேட்க, அதற்கு அவர். நீ வேறப்பா அர்த்தம்லாம் கேட்டுகிட்டு, நான் லைட்டா ஒரு கட்டிங் போட்டுட்டு, கீ போர்ட தட்டுவேன். என்ன வருதோ அதான். போஸ்ட் பண்ணா, முதல் வரி சூப்பர், கடைசி பாரா அருமைனு பின்னூட்டம் வரும். சில பேரு அவங்களுக்கு புரிஞ்சத பின்னூட்டமா போட்ருபாங்க.அப்புறம் தான் எனக்கே புரியும்னா பாத்துகோயன் என்றார். எலக்கியம் பிரகாசமாக ஒளிர ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு கண்காட்சியை சுத்தி வரும் பொழுது உயிர்மையில் அவரை பார்த்தேன். வாசகர்கள் சூழ நின்றிருந்தார்.ரோட்டிற்கு அந்தபுறம் கல்லூரியில்,அவதார புருஷர் காட்சி அளித்துகொன்டிருக்க இவரு ஏன் போகலைன்னு சிறு மூளை யோசித்தாலும், இவரின் புத்தக விற்பனை அமோகமாக இருக்க அந்த கல்பதருவை வேண்டிக்கொண்டேன்.

பிரபல பதிவர்கள் புதிய பதிவர்கள் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றாய் பழகியது ஆறுதலாய் இருந்தது.அண்ணன் தண்டோரா எனக்கு கருவேல நிழல் புத்தகம் பரிசளித்தார்.மற்றபடி, நேற்று கண்காட்சிக்கு கன்னி பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது மனதுக்கு குதூகலமாக இருந்தது.

மையல் கொண்ட பெண்ணின் கையில் சமையல் குறிப்பு புத்தகம்!!!!! (இதுக்குதான் இந்த கவிஞர்கள் சகவாசமே கூடாதுங்கிறது).

பின்பு இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை புகைபடமாக்கினோம். (வரலாறு முக்கியம் அமைச்சரே).

புகைப்பட லிங்க் இங்கே

பதிவுன்னா எதாவது உருப்படியா இருக்கணும், மொக்கை போட கூடாது என்று அட்வைஸ் சொன்னவருக்காக.உருப்படியான டிப்ஸ்


ஆண்களுக்கு : - நீங்கள் ஷேவ் செய்து முடித்தவுடன், ப்ளேடை சுத்தம் செய்து, ப்ளேடின் இருபக்கமும் சிறிது தேங்கா எண்ணையை தடவவும். இது ப்ளேடை துரு பிடிக்காமல் வைத்திருந்து அதிக ஷேவ்கள் தரும்.

பெண்களுக்கு:- அதேதான், நீங்கள் காய் நறுக்கி முடித்தவுடன், கத்தியை நன்கு சுத்தம் செய்து, கத்தியின் முனையில் சிறிது தேங்கா எண்ணையை தடவவும். இது கத்தியை துரு பிடிக்காமல் வைத்திருக்க உதவும்.





**************************************************************

Friday, January 1, 2010

புத்தக கண்காட்சியும் வருடத்தின் கடைசி நாளும்..

நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். போன வருடத்தை விட நிறைய ஸ்டால்கள். நேற்று கூட்டம் இல்லாததால் பைக் பார்கிங்கில் எதுவும் பிரச்சினை இல்லை. பார்கிங்கில் குடுக்கும் டிக்கெட் அவ்வளவு சிறிசு. திரும்பி வரும்போது டிக்கெட்ட தேடு தேடுன்னு தேட வேண்டி இருக்கு. பார்கிங் டிக்கெட்டுக்கும் யாரவது ஸ்பான்சர் பிடுச்சிருகலாம். நுழைவு கட்டணம் அஞ்சு ரூபாதான். போன தடவை மாதிரி இல்லாமல் நல்லா அகலமான வீதி. இருபக்கமும் ஸ்டால்கள். நானூறுக்கும் மேல் ஸ்டால்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கான அறிவியல் பொருட்கள் விற்கும் ஸ்டாலில் நல்ல கூட்டம் இருந்தது.
நேற்று,நான் எந்த புத்தகமும் வாங்கவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த ப்ளாக் ஆரம்பித்த பிறகு வாசிப்பு அனுபவம் கூடி உள்ளதால் ஒவ்வொரு புத்தகமாக புரட்டி பார்த்து, அதன் வாசத்தை உணர்ந்து, அதில் மனம் லயித்து, அந்த எழுத்தாளரின் கற்பனையுடன் ஒன்றி... போதும் நீங்க நம்பிடீங்கன்னு நினைக்கிறேன்.. அப்படியெல்லாம் ஒரு காரணமும் இல்லை.. இன்னும் இந்த மாசம் சம்பளம் போடலை, அதான் காரணம்... நான் புத்தகம் வாங்க அஞ்சு தேதிக்கு மேல ஆகும்.

நான் அப்படியே பராக்கு பாத்துட்டு போய்ற்றுக்கும் போது என்னையே ஒருத்தர் பாத்துட்டு இருந்தாரு. அவரு நம்ம பலாபட்டறை ஷங்கர். சரி வாங்கன்னு சேந்து சுத்தினோம். உயிர்மை ஸ்டால்ல இன்னொரு பதிவரை சந்தித்தோம். அவர் வண்ணத்துபூச்சி சூர்யா. மனிதர், நிறைய புத்தகங்கள் வாங்கி இருந்தார். ஆனால், இவ்வளவு ரூபாய்க்கு வாங்கிட்டேன் வீட்டுக்கு போய் என் மனைவிகிட்ட என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியலை என்று கூறி கொண்டிருந்தார். பின்னர் எங்களுடன் இணைந்து கொண்டது அண்ணன் உண்மை தமிழன். நான்காவதாக ஒருமுறை அவர்களுடன் கண்காட்சியை சுற்றினேன். மனிதர் ஏகப்பட்ட பேரை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் வாங்கியது கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்கள். இடையில் பதிவர் லக்கியையும் சந்தித்தோம்.
நாங்கள் சந்தித்த மற்றொருவர் பா.ராகவன். அவர் அண்ணன் உண்மை தமிழனிடம், பதிவுன்னா பத்து வரிக்கு மேல எழுதாத, சினிமா விமர்சனம்னா ஒரு வரியோட நிறுத்திக்க என்று சிரியஸா (எழுத்து பிழை அல்ல ) அட்வைஸ் பண்ணினார். நடக்கிற கதையா அது.
இயக்குனர் முக்தா சீனிவாசனையும் சந்தித்தோம். அவர் இலவசமாக நடத்தி வரும் நூலகத்தை பற்றி கூறினார். அதை பற்றிய உண்மை தமிழனின் பதிவு இங்கே .

புத்தாண்டு கொண்டாட்டத்தினால் திரும்பி வீட்டுக்கு செல்லும் போது சரியான ட்ராபிக் ஜாம். பைக்கை முதல் கியரிலேயே ஓடிக்கொண்டு ஒரு காலால் நொண்டி அடித்துக்கொண்டு வீடு சேர்ந்தேன்.வரும் வழியில் டாஸ்மாக்கில் கூட்டம் முண்டி அடித்து கொண்டிருந்தது. (வாழ்க மஞ்சள் துண்டு)

நான் குடி இருக்கும் காலனியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. மேடை அமைத்து செய், எனை எதாவது செய் என்று சிறு குழந்தைகள் இடுப்பு அசைத்து ஆடிகொண்டிருக்க அம் "மாக்களும்" அப்பாக்களும் ரசித்து கொண்டு இருந்தனர். கூச்சலில் அவர்களும் இணைந்து கத்தி கொண்டு இருந்தனர். சாதாரண நாளில் அடுத்த வீட்டில் யார் இருகின்றார் என்று தெரியாத இவர்கள், புத்தாண்டில் எல்லாருடன் இணைந்து கத்தி கூத்தடித்து கொண்டு இருந்தது வேடிக்கையாக இருந்தது. பெண்கள் இதை வடிகாலாக நினைகிறார்களா, இல்லை சாந்தமாக இருக்கும் ஒருவன், கூட்டத்தில் கல் எடுத்து எறிவதை போன்ற குழு மனபானமையா தெரியவில்லை.

பன்னிரண்டு மணி அடிக்க இரண்டு நிமிடம் முன்பு அனைத்து இசையும் நிறுத்தப்பட்டு அமைதி ஆனது. சரியாக பன்னிரண்டு மணிக்கு, ஹாப்பி நியூ இயர் என்ற கூச்சல் காதை பிளக்க, காலனிக்குள் தூங்க முயற்சித்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடுக்கிட்டு தெறித்து ஓடியது.

மேடை அருகே ஒரு பெண்ணுடன் கடலை வறுத்து கொண்டிருந்த ஒருவன் அந்த பெண்ணை தள்ளி கொண்டு போக, காலம் 2009 ஆம் வருடத்தை தள்ளி கொண்டு போய் விட்டது.

மற்றும் ஒரு ஆண்டு.... மற்றும் ஒரு நாள்.....





****************************************************************